சூடான் மற்றும் தென் சூடான் கிறிஸ்தவர்கள் அச்சத்தில் வாழ்கின்றனர்
ஏப்ரல்,17,2012. சூடானுக்கும் தென் சூடானுக்கும் இடையே போர் நிலவும் சூழல் உருவாகியுள்ள
நிலையில், இரு நாடுகளின் கிறிஸ்தவர்களும் பெரும் அச்சத்தில் வாழ்வதாக செய்தி நிறுவனங்கள்
தெரிவிக்கின்றன. 20 இலட்சத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள், குறிப்பாக தென்சூடான்
கிறிஸ்தவர்கள் உயிரிழப்பதற்குக் காரணமான மோதல்கள் மீண்டும் உருவாவதற்கான அச்சம் இருக்கும்
சூழல்களை விவரிக்கும் செய்தி நிறுவனங்கள், கடந்த ஆண்டு ஜூலை மாதம் தென் சூடான் அரசு சுதந்திரம்
அடைந்த பின்னரும் அந்நாட்டின் மீது சூடானின் தாக்குதல்கள் தொடர்வதாக எடுத்துரைக்கின்றன. எல்லைகள்
குறித்த கருத்து வேறுபாடுகள், எரிசக்தி எண்ணெய் வருமானம், குடியுரிமை வழங்கல் போன்றவைகளில்
இரு நாடுகளுக்கிடையே மோதல்கள் தொடர்ந்து வருகின்றன.