2012-04-17 15:36:50

இந்தோனேசியாவில் சமயச் சுதந்திரம் மதிக்கப்பட வேண்டி அமைதி போராட்டம்


ஏப்ரல்,17,2012. இந்தோனேசியாவில் சமயச் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் சட்டங்கள் அமல்படுத்தப்படவேண்டும் என்ற விண்ணப்பத்துடன் தலைநகரிலுள்ள அரசுத்தலைவர் மாளிகை முன் அமைதி ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர் அந்நாட்டு கிறிஸ்தவர்கள்.
சில இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்கள் சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும், அதற்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காப்பதையும் வன்மையாகக் கண்டித்துள்ள இந்தக் கிறிஸ்தவ குழுக்கள், அரசின் உடனடி நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளன.
மதச் சுதந்திரம் இந்தோனேசியாவில் மதிக்கப்படவேண்டும் என கிறிஸ்தவக் குழுக்கள் நடத்திவரும் போராட்டங்களுக்கு பல மனிதஉரிமை குழுக்களும் அந்நாட்டின் அரசு சாரா அமைப்புகளும் தொடர்ந்து ஆதரவு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.