2012-04-17 15:37:38

இந்திய திருஅவையின் மனித உரிமை பயிற்சி முகாம்


ஏப்ரல்,17,2012. மனிதஉரிமை நடவடிக்கைகளில் ஊக்கம் மற்றும் பாதுகாப்பு குறித்த விடயங்களில் கத்தோலிக்கரின் ஈடுபாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் இரு நாள் மனித உரிமை பயிற்சி பாசறையை பெங்களூருவில் நடத்தியது இந்திய தலத் திருஅவை.
நீதியும் அமைதியும் நிறைந்த ஒரு புதிய சமூகத்தைக் கட்டியெழுப்புவதில் மனித உரிமை பாதுகாப்பு இன்றியமையாத ஒரு கூறு என்பதை மனதிற்கொண்டு இத்தகைய பயிற்சி முகாம்களை 2004ம் ஆண்டிலிருந்து நடத்தி வருகிறது இந்திய ஆயர் பேரவையின் நீதி, அமைதி மற்றும் வளர்ச்சி அவை.
மனிதஉரிமை மேம்பாட்டு முயற்சிகள், பங்குதளங்களில் இத்தகையை பயிற்சி முகாம்களை நடத்துதல், பசி, நில ஆக்ரமிப்பு, குடிபெயர்தல் போன்ற பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தல், மனித உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறைகள், அரசுசாரா அமைப்புகளுடன் இணைந்து உழைத்து மனித உரிமைகளை முன்னேற்றல் என பல்வேறு தலைப்புகளில் பெங்களூருவில் நடைபெற்ற இரண்டு நாள் கூட்டத்தில் ஏறத்தாழ 25 பேருக்கு பயிற்சி வழங்கியது தலத்திருஅவையின் நீதி, அமைதி மற்றும் வளர்ச்சி அவை.








All the contents on this site are copyrighted ©.