2012-04-16 15:55:06

பிலிப்பீன்ஸ் குருவுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு உயரிய விருது


ஏப்ரல்,16,2012. சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதுகளுள் ஒன்றைப் பெற்றுள்ளார் பிலிப்பீன்ஸ் கத்தோலிக்க குரு Edu Gariguez.
இவ்விருதை அமெரிக்க ஐக்கிய நாட்டின் சான்ஃபிரான்சிஸ்கோவில் இத்திங்களன்றுப் பெற்ற அவர், தன் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் பணிகளுக்குத் தூண்டுதலாக இருந்த பிலிப்பீன்ஸ் மிண்டோரோ மாநில மங்கியான் பழங்குடி மக்களுக்கு இவ்விருதை அர்ப்பணிப்பதாகத் தெரிவித்தார்.
ஒரு சிலரின் குறுகிய கால இலாப நோக்கிற்காக மக்களோ, சுற்றுச்சூழலோ தியாகம் செய்யப்படக்கூடாது என்ற அறைகூவலுடன் சுரங்கத் தொழிலுக்கு எதிராக குரல் எழுப்பி வரும் குரு Gariguez, இலாப நோக்கைவிட சுற்றுச்சூழல் பாதுகாப்பு முக்கியத்துவம் நிறைந்தது என்பதை வலியுறுத்தினார்.
பிலிப்பீன்ஸ் ஆயர்களின் சமூக நடவடிக்கைகளுக்கான தேசிய செயலகத்தின் உயர் செயலர் குரு Gariguez பெற்றுள்ள இவ்விருது, ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் டாலர் பரிசுத்தொகையை உள்ளடக்கியது.








All the contents on this site are copyrighted ©.