2012-04-16 15:47:00

கவிதைக் கனவுகள் .... கொடுப்பதே பெறப்படும்


நீ இன்று கொடுப்பது நினைப்பது
நீ இன்று சொல்வது செய்வது
திரும்பி வரும் உன்னிடம்
பலுகிப் பெருகிப் பன்மடங்காகி.
இன்றே வரும் இன்றே வராது
ஆனால் வரும்.
வரும் வராது எதிர்பார்க்கும் இடத்திலிருந்து
ஆனால் வரும்.
நீ செய்பவை சொல்பவை
நீ கொடுப்பவை நினைப்பவை
உன்னைக் கண்ணாடியில் பிரதிபலிக்கும்.
நீ பேசும் நான்கு நல்வார்த்தை
நறுமண மாலையாக அலங்கரிக்கும்.
நீ பேசும் தீய சொல்லும்
தீமையாய்த் திரும்பி வரும்.
அன்புணர்வைப் பரப்பு
அன்பாலே நீ நிரம்புவாய்
எண்ணங்கள் ஆன்மாவின் வானொலிகள்
கனிவான எண்ணங்கள்
கடலளவாய் அள்ளி வரும் மகிழ்ச்சியை.
சில்லறைத்தனங்கள்
சொல்ல முடியாத வேதனைகளைப் பெருக்கும்.
நீ கொடுப்பது எதுவோ
அதுவே உனக்குப் பன்மடங்காகக் கிடைக்கும்







All the contents on this site are copyrighted ©.