2012-04-16 15:54:23

கத்தோலிக்கச் சிறார் காப்பகம் வியட்நாம் அதிகாரிகளால் தாக்கப்பட்டுள்ளது


ஏப்ரல்,16,2012. வியட்நாம் தலைநகரில் உள்ள அநாதைச் சிறார் இல்லத்திற்குள் அந்நாட்டு காவல்துறையின் உதவியுடன் நுழைந்த குண்டர்கள் குழு ஒன்று, சிறார்களை நையப்புடைத்துக் காயப்படுத்தியதுடன், அச்சிறார்களுக்காக பரிந்து பேசிய குரு ஒருவரை தாக்கி, அவரைச் சுயநினவற்ற நிலைக்கு ஆளாக்கியுள்ளது.
கம்யூனிச அதிகாரிகளின் தூண்டுதலின் பேரில் காவல்துறையின் உதவியுடன் சிறார் காப்பகத்தில் நுழைந்த குற்றக்கும்பல், தங்கள் தாக்குதல்களை நடத்தியபின் எவ்வித காயமுமின்றி காவல்துறையின் பாதுகாப்புடன் வெளியேறியுள்ளது.
கத்தோலிக்கச் சுயவிருப்பப் பணியாளர்கள் மற்றும் குரு Nguyen Van Binhன் உதவியுடன் நடத்தப்பட்டு வந்த இந்தச் சிறார் இல்லம் தாக்கப்பட்டதை அறிந்த குரு Van Binh, சிறார்களைக் காக்கும் நோக்குடன் அவ்வில்லத்திற்குள் நுழைய முயன்றபோது, காவல் துறையால் தாக்கப்பட்டு சுயநினைவிழந்தார்.
சுயநினைவை இழந்துள்ள குருவுக்குத் தனியொரு இடத்தில் வைத்து தீவிரச் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.