ஏப்.14,2012: உலகப் புகழ் பெற்ற டைட்டானிக் சொகுசுக் கப்பல் விபத்துக்குள்ளானதன் நூறாம்
ஆண்டு நினைவுகூரப்படும் இவ்வேளையில், கடல்தொழிலாளர்கள் மற்றும் கடல் பயணம் செய்வோரின்
பாதுகாப்புக்கானத் தங்களது அர்ப்பணத்தைப் புதுப்பிக்குமாறு அரசுகளுக்கும் கப்பல் தொழிற்சாலைகளுக்கும்
வேண்டுகோள் விடுத்துள்ளது IMO என்ற ஐ.நா.கடல்சார் நிறுவனம். பிரிட்டனிலிருந்து நியுயார்க்
நகருக்குப் புறப்பட்ட டைட்டானிக் சொகுசுக் கப்பல், 1912ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி பனிப்பாறையில்
மோதி மூழ்கியது. இதில் பயணம் செய்த 2,200 பேரில் 1,500 பேர் இறந்தனர். கடல் பயணத்தில்
வாழ்வுப் பாதுகாப்பு குறித்த SOLAS என்ற முதல் அனைத்துலக ஒப்பந்தம் 1914ம் ஆண்டில் உருவாகுவதற்கு,
இந்த டைட்டானிக் கப்பல் விபத்தே காரணம் என்று IMO நிறுவனப் பொதுச் செயலர் Koji Sekimizu
கூறினார்.