2012-04-12 15:28:06

Dementia நோயாளிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரிக்கக்கூடும் - WHO


ஏப்.12,2012. Dementia என்ற மனத்தளர்ச்சியினால் மனநிலை பாதிப்பு நோய்க்கு உள்ளாகும் மக்களின் எண்ணிக்கை 2030ம் ஆண்டுக்குள் 6 கோடியே 57 இலட்சமாக அதிகரிக்கக்கூடும் என்று உலக நலவாழ்வு நிறுவனம் (WHO) எச்சரித்துள்ளது.
இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவரீதியாகக் கண்டுபிடிப்பது, அதிக வருவாயுள்ள நாடுகளில்கூட குறைபடுகின்றது என்று கூறும் அந்நிறுவனம், தற்போது உலகிலுள்ள 3 கோடியே 56 இலட்சம் dementia நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்துப் பராமரிக்க ஆண்டுக்கு 60,400 கோடி டாலர்களுக்கும் அதிகமானத் தொகை செலவாகின்றது என்று தெரிவித்தது.
மூளை சம்பந்தப்பட்ட பல்வேறு நோய்களால் ஏற்படும் இந்நோய், நினைவு, சிந்தித்தல், நடத்தை ஆகியவற்றைப் பாதித்து, அன்றாட வேலைகளைச் செய்வதற்குரிய திறனையும் குறைக்கின்றது.
தற்போது உலகில் எட்டு நாடுகளில் மட்டுமே dementia நோய்த்தடுப்புக்கு நாடு தழுவிய அளவில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.








All the contents on this site are copyrighted ©.