கர்தினால் Luis Aponte Martinezஇறைபதம் அடைந்ததைத் தொடர்ந்து,
திருத்தந்தை அனுப்பிய இரங்கல் தந்தி
ஏப்ரல்,11,2012. Puerto Rico நாட்டின் கர்தினால் Luis Aponte Martinez இறைபதம் அடைந்ததைத்
தொடர்ந்து, தன் ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிடும் இரங்கல் தந்தியை அந்நாட்டுத் தலத் திருஅவைக்கு
அனுப்பியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். மறைந்த கர்தினால் Martinez அவர்களின்
உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கும் திருத்தந்தையின்
தந்திச்செய்தி, கர்தினாலின் ஆன்ம இளைப்பற்றிக்கான செபத்திற்கும் உறுதி அளிக்கிறது. கர்தினால்
Martinez தான் வாழ்ந்த காலத்தில் பிறரன்புடனும், ஆன்மீகத் தாகத்துடனும் செயலாற்றினார்
எனவும் தன் இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை. இச்செவ்வாயன்று இறைபதம்
அடைந்த கர்தயால் Luis Aponte Martinez 89 வயது நிரம்பியவர்.