ஏப்ரல்,10,2012. இன்றைய உலகில் நாம் உணர்ந்தாலும் உணரவில்லையெனினும் ஒருவரின் வாழ்வுப்
பாதையை பேராசையே நிர்ணயிக்கிறது என்று இந்தோனேசியப் பேராயர் Ignatius Suharyo கூறினார். கிறிஸ்து
உயிர்ப்புப் பெருவிழாவையொட்டி தலைநகர் Jakarta உயர்மறைமாவட்ட விசுவாசிகளுக்குச் செய்தி
வழங்கியப் பேராயர், பேராசை என்பது மக்களின் இணக்க வாழ்வைப் பாதிப்பதோடு, ஒழுக்கரீதி
மதிப்பீடுகளையும் அழித்து, ஓர் அபாயகரமான அழிவுக்கு இட்டுச்செல்லும் என்றார். சிலுவையை
நாம் துன்பமாக நோக்கினாலும் அது இறை ஒருமைப்பாட்டின் தோற்றம் எனவும் கூறினார் பேராயர்
Suharyo. ஆகவே, ஒருமைப்பாட்டின் துணைகோண்டு பேராசையை வெற்றி கண்டு, ஒரே குடும்பத்தின்
அங்கத்தினர்களாக வாழ இந்தோனேசிய மக்களனைவருக்கும் அழைப்பு விடுப்பதாகவும் கூறினார் பேராயர்.