2012-04-10 15:04:49

Puerto Rico கர்தினால் Luis Aponte Martínez இறைபதம் அடைந்தார்


ஏப்ரல்,10,2012. Puerto Rico நாட்டின் தலைநகர் San Juanன் முன்னாள் பேராயர் கர்தினால் Luis Aponte Martínez இறைபதம் அடைந்தார்.
1922ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி பிறந்த கர்தினால், 1950ம் ஆண்டு குருவாகவும் 1960ம் ஆண்டு ஆயராகவும் திருநிலைப்படுத்தப்பட்டார்.
1973ம் ஆண்டு திருஅவையில் கர்தினாலாக உயர்த்தப்பட்ட இவர், 1999ம் ஆண்டு San Juan உயர்மறைமாவட்டப் பணிகளிலிருந்து ஓய்வு பெற்றார்.
இச்செவ்வாயன்று, அதாவது ஏப்ரல் 10ம் தேதி அவரின் 62வது குருத்துவ விழாவைச் சிறப்பிக்க உயர்மறைமாவட்ட குருக்களும் அவரின் நண்பர்களும் தயாரித்துவந்த வேளையில் கர்தினால் Aponte Martínezன் மரணம் இடம்பெற்றுள்ளது.
கர்தினால் Aponte Martínezன் மரணத்துடன் திருஅவையில் கர்தினால்களின் எண்ணிக்கை 210ஆகக் குறைந்துள்ளது. இதில் 123 பேரே திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய 80 வயதிற்குட்பட்டவர்கள்.
மூன்று நாட்களுக்கு முன்னர், அதாவது இம்மாதம் 7ம்தேதி, புனித சனிக்கிழமையன்று சிரியாவின் கர்தினால் முதலாம் Moussa Daoud அவர்களும் இறைபதம் அடைந்தார்.








All the contents on this site are copyrighted ©.