2012-04-09 15:09:34

செப்டம்பர் மாதம் லெபனனில் திருத்தந்தையின் திருப்பயணம்


ஏப்ரல்,09,2012. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இவ்வாண்டு செப்டம்பர் 14 முதல் 16 வரை லெபனன் நாட்டில் திருப்பயணம் மேற்கொள்வார் என லெபனன் நாட்டு அரசும் அந்நாட்டு ஆயர் பேரவையும் அறிவித்துள்ளன.
2010ம் ஆண்டு அக்டோபர் 10 முதல் 24 வரை வத்திக்கானில் இடம்பெற்ற மத்திய கிழக்குப் பகுதிக்கான சிறப்பு ஆயர் மாமன்றத்தின் தீர்மானத்தொகுப்பை வெளியிடும் நோக்கில் இந்நாட்டிற்குத் திருப்பயணம் மேற்கொள்கிறார் திருத்தந்தை.
லெபனன் அரசுத்தலைவரின் அழைப்பை ஏற்று அந்நாட்டிற்கு திருத்தந்தை மேற்கொள்ளவிருக்கும் இத்திருப்பயணம், லெபனனுக்கும் வத்திக்கானுக்கும் இடையேயான வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த உறவின் ஆழத்தை உறுதிப்படுத்துவதாக இருக்கும் என திருப்பீட பத்திரிகைத்துறை வெளியிட்ட செய்தி கூறுகிறது.
நாட்டின் அரசியல், சமூக மற்றும் மதத்தலைவர்களை இந்த செப்டம்பர் திருப்பயணத்தின்போது சந்திக்க உள்ள திருத்தந்தை, லெபனன் இளைஞர்களையும் தனியாக சந்திப்பார் என தலைநகர் பெய்ரூட் பேராயர் Boulos Matar வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.