2012-04-09 15:10:24

உயிர்ப்புப் பெருவிழாவன்று ஹாங் காங் உயர்மறைமாவட்டத்தில் 3500க்கும் அதிகமான வயது வந்தோர் திருமுழுக்கு பெற்றனர்


ஏப்ரல்,09,2012. புதிதாகத் திருமுழுக்கு பெறுவோருக்கு மறைகல்வி வழங்கியதன் மூலம் மறைகல்வி ஆசிரியர்கள் மற்றவர்களின் விசுவாசத்தை மட்டுமல்லாமல், தங்கள் விசுவாசத்தையும் உறுதிப்படுத்துகின்றனர் என்று ஹாங் காங் கர்தினால் John Tong கூறினார்.
உயிர்ப்புப் பெருவிழாவன்று ஹாங் காங் உயர்மறைமாவட்டத்தில் 3500க்கும் அதிகமான வயது வந்தோர் திருமுழுக்கு பெற்றதைக் குறித்து தன் மகிழ்வை வெளியிட்ட கர்தினால் John Tong, தான் வழங்கிய உயிர்ப்புச் செய்தியில் இவ்வாறு கூறினார்.
அண்மைக் காலங்களில் ஹாங் காங் பகுதியில் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் குறித்து தன் மகிழ்வை வெளியிட்ட கர்தினால் John Tong, எண்ணிக்கையில் மட்டுமல்லாமல், விசுவாசத்தின் ஆழத்திலும் கத்தோலிக்கர்கள் வளர வேண்டும் என்ற வேண்டுகோளையும் விடுத்தார்.
ஹாங் காங் உயர்மறைமாவட்டத்தில் தற்போது சீன இனத்தைச் சேர்ந்த 3,63,000 கத்தோலிக்கர்களும், 1,38,000௦ சீனரல்லாத கத்தோலிக்கர்களும் உள்ளனர். இவர்கள் மத்தியில் 1500க்கும் அதிகமான மறைகல்வி ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.








All the contents on this site are copyrighted ©.