பாகிஸ்தானில் புனித வார நிகழ்வுகளைத் தடுக்கும் முயற்சிகள்
ஏப்ரல்,04,2012. இதற்கிடையே, பாகிஸ்தானில் புனித வார நிகழ்வுகளையும், உயிர்ப்புத் திருநாள்
கொண்டாட்டங்களையும் தடுக்கும் விதமாக அடிப்படைவாத இஸ்லாமியக் குழுக்கள் பல்வேறு செயல்பாடுகளில்
ஈடுப்பட்டுள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. பஞ்சாப் மாநிலத்தின் Sarghoda பகுதியில்
உள்ள Eidgah கிறிஸ்தவ சமுதாயம் வெளியிட்டிருந்த புனித வார அறிவிப்புகள் மீதும், அப்பகுதியில்
இருந்த திரு உருவங்கள் மீதும் கருப்பு வண்ணத்தை ஊற்றி, புனித வாரச் சடங்குகள் நடத்தப்படக்
கூடாதென்ற வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. இந்த வன்முறைச் செயலுக்கு எதிராக புகார் அளிக்கச்
சென்ற கிறிஸ்தவ குழுக்களின் விண்ணப்பங்களை காவல் துறையினர் ஏற்க மறுத்தனர் என்று ஆசிய
செய்திக் குறிப்பொன்று கூறுகிறது. புனித வாரத்தின்போது கிறிஸ்தவர்கள் அச்சத்தில் வாழவேண்டியுள்ளது
என்றும், அரசு மக்களுக்குத் தேவையான பாதுகாப்பைத் தர தவறிவிட்டது என்றும் Sargodha பகுதியில்
பணிபுரியும் அருள்தந்தை John Gill கூறினார்.