ஏப்ரல் 04, 2012. – கவிதைக் கனவுகள்.............பாரதியின் பார்வையில் இயேசு
“ஈசன் வந்து சிலுவையில் மாண்டான், எழுந்து யிர்த்தனன் நாள் ஒரு மூன்றில்; நேசமா
மரியா மக்த லேநா நேரிலே இந்தச் செய்தியைக் கண்டாள்; தேசத் தீர்! இதன் உட்பொருள்
கேளீர்; தேவர் வந்து நமக்குட் புகுந்தே நாச மின்றி நமை நித்தங் காப்பார்; நம்
அகந்தையை நாம் கொன்று விட்டால்.
அன்புகாண் மரியா மக்த லேநா, ஆவி காணுதிர் யேசு
கிறிஸ்து; முன்பு தீமை வடிவினைக் கொன்றால் மூன்று நாளினில் நல்லுயிர் தோன்றும்; பொன்பொ
லிந்த முகத்தினிற் கண்டே போற்று வாள் அந்த நல்லுயிர் தன்னை; அன்பெனும் மரியா மக்த
லேநா ஆஹ! சாலப் பெருங்களி யிஃதே.
உண்மை யென்ற சிலுவையிற் கட்டி உணர்வை ஆணித்
தவங்கொண் டடித்தால், வண்மைப் பேருயிர் யேசு கிறிஸ்து வான மேனியில் அங்கு விளங்கும்; பெண்மைகாண்
மரியா மக்த லேநா, பேணும் நல்லறம் யேசு கிறிஸ்து; நுண்மை கொண்ட பொருளிது கண்டீர் நொடியி
லிஃது பயின்றிட லாகும்.