2012-04-04 15:04:01

உலகில் சிறார் படைவீரரை முற்றிலுமாக ஒழிக்க முடியும் - ஐ.நா.சிறப்புப் பிரதிநிதி


ஏப்.04,2012. உலகில் எடுக்கப்பட்டு வரும் உறுதியான நடவடிக்கைகள் மூலம் சிறார் படைவீரரை முற்றிலும் ஒழிக்க முடியும் என்று ஆயுதத்தாக்குதல் பகுதிக்கான ஐ.நா.சிறப்புப் பிரதிநிதி Radhika Coomaraswamy கூறினார்.
தென் சூடானை அண்மையில் பார்வையிட்டுத் திரும்பிய பின்னர் ஐ.நா.செய்தி மையத்தில் அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார் Coomaraswamy.
கடந்த ஆண்டில் ஆயுதக் குழுக்களிடமிருந்து 11 ஆயிரம் சிறார் மீட்கப்பட்டனர் என்றுரைத்த அவர், அரசுகள் மற்றும் அரசு சாரா அமைப்புக்களுடன் செய்யப்பட்டுள்ள ஒப்பந்த திட்டங்களின்படி, உலகில் எஞ்சியுள்ள சிறார் படைவீரர்கள் பொது வாழ்வுக்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்ற நம்பிக்கையைத் தெரிவித்தார்.
2006ம் ஆண்டு ஏப்ரலில் Radhika Coomaraswamy பொறுப்பேற்ற பின்னர், 17 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.








All the contents on this site are copyrighted ©.