ஏப்ரல் 4 அனைத்துல நிலக்கண்ணி வெடிகள் விழிப்புணர்வு தினம்
ஏப்.03,2012. ஏப்ரல் 4ம் தேதி கடைப்பிடிக்கப்படும் அனைத்துல நிலக்கண்ணி வெடிகள் விழிப்புணர்வு
தினத்தை முன்னிட்டு செய்தி வெளியிட்டுள்ள பான் கி மூன், நிலக்கண்ணி வெடிகள் விழிப்புணர்வுத்
திட்டங்கள் போர் முடிந்த பின்னர் இடம் பெறும் நடவடிக்கைகளுக்கு இன்றியமையாதவை என்று கூறியுள்ளார். நிலக்கண்ணி
வெடிகள் குறித்த விழிப்புணர்வு, மனிதாபிமான நிவாரண முயற்சிகளுக்கும் அமைதி நடவடிக்கைகளுக்கும்
வளர்ச்சித் திட்டங்களுக்கும் அவசியம் என்றும் அச்செய்தி கூறுகிறது. நாற்பதுக்கும்
மேற்பட்ட நாடுகளில் நிலக்கண்ணி வெடிகள் குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை ஐ.நா. மேற்கொண்டு
வருகிறது என்றும் பான் கி மூன் கூறினார். அனைத்துல நிலக்கண்ணி வெடிகள் தடை ஒப்பந்தத்தில்
கையெழுத்திட்டுள்ள 159 நாடுகள் அதனை நடைமுறைப்படுத்துமாறும் அவர் கேட்டுள்ளார்.