Marshall தீவுகளில் அறுபதுக்கு ஆண்டுகளுக்குப் பின்னரும் அணுப்பரிசோதனைகளின் விளைவுகள்
மார்ச்31,2012. Marshall தீவுகளில் அணுப்பரிசோதனைகள் நடத்தப்பட்டு அறுபதுக்கு மேற்பட்ட
ஆண்டுகள் ஆகியும், இன்னும் அந்நாட்டினர் அதன் பின்விளைவுகளை அனுபவித்து வருகின்றனர் என்று
ஐ.நா. வல்லுனரின் அறிக்கை கூறுகிறது. நிர்வாகம் மற்றும் ஆபத்தான கழிவுப் பொருள்களோடு
தொடர்புடைய மனித உரிமைகள் குறித்த ஐ.நா.சிறப்புத் தொடர்பாளர் Calin Georgescu வெளியிட்ட
அறிக்கையில், இந்த அணுப்பரிசோதனைகளை நடத்திய அமெரிக்க ஐக்கிய நாட்டுடன் சேர்ந்து Marshall
தீவுகள் நாடு, இப்பிரச்சனையைக் களைய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுள்ளார். அணுப்பரிசோதனைகள்
நடத்தப்பட்டதால் ஏற்பட்டுள்ள நலவாழ்வுப் பாதிப்புக்கள் மற்றும் பிற மாற்றங்கள் குறித்து
அறிக்கை வெளியிட்டுள்ள அவர், பன்னாட்டுச் சமுதாயம் இவ்விவகாரத்தில் தலையிடுமாறு வலியுறுத்தியுள்ளார். Marshall
தீவுகளில், 1946க்கும் 1958ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், 67 அணுப் பரிசோதனைகளை
நடத்தியது அமெரிக்க ஐக்கிய நாடு.