2012-03-30 14:41:22

சிலுவையில் அறையும் பாவக்கழுவாய் நடவடிக்கைக்கு பிலிப்பீன்ஸ் ஆயர்கள் எச்சரிக்கை


மார்ச்30,2012. பிலிப்பீன்ஸில், புனித வாரத்தில் தங்கள் பாவங்களுக்குப் பிராயச்சித்தமாக தங்களைச் சிலுவையில் அறையும் கத்தோலிக்கரின் நடவடிக்கையை எச்சரித்துள்ளது அந்நாட்டு ஆயர் பேரவை.
பிலிப்பீன்ஸில் புனித வெள்ளியன்று மக்கள் தங்களைச் சிலுவையில் அறையும் பழக்கம் பல ஆண்டுகளாக இடம் பெற்று வருகிறது. வருகிற புனித வெள்ளியன்று அந்நாட்டின் Pampanga மாநிலத்தில் மரச்சிலுவைகளில் அறையப்படுவதற்கு ஏற்கனவே குறைந்தது 20 பேர் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர். இந்நிகழ்வைப் பார்ப்பதற்கு ஒவ்வோர் ஆண்டும் Pampanga மாநிலத்திற்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான பயணிகள் செல்கின்றனர்.
இந்நிகழ்வு குறித்துப் பேசிய Cebu பேராயர் Jose Palma, தங்கள் மீது வேதனைகளைச் சுமத்தும் மக்களைவிட, தங்களது விசுவாசத்தைப் புதுப்பிக்கும் மக்களையே திருஅவை விரும்புகிறது என்று கூறினார்.
சிலுவையில் அறையும் இந்தப் பழக்கம் குறித்து பிலிப்பீன்ஸ் ஆயர்கள் தீர்ப்புக் கூறவோ அல்லது கண்டனம் செய்யவோ இல்லை, மாறாக அதனை ஊக்கப்படுத்தவில்லை என்று பேராயர் Palma கூறினார்.








All the contents on this site are copyrighted ©.