மார்ச்30,2012. உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி ஆகியவற்றோடு போட்டிப் போடக்கூடிய புதிய
வங்கி ஒன்றைத் தொடங்குவதற்கு BRICS நாடுகள் திட்டமிட்டுள்ளன. பிரேசில், இரஷ்யா, இந்தியா,
சீனா, தென்னாப்ரிக்கா ஆகிய வேகமாக வளரும் ஐந்து நாடுகள் ஒன்று சேர்ந்து உருவாக்கிய BRICS
என்ற அமைப்பின் நான்காவது உச்சி மாநாடு புதுடெல்லியில் இவ்வியாழனன்று முடிந்துள்ளது. இம்மாநாட்டின்
இறுதியில் வெளியிடப்பட்ட அறிக்கையில், உலக நிதியகம், உலக வங்கி போன்ற சர்வதேச நிதி அமைப்புக்களில்,
BRICS நாடுகளின் குரல்களுக்கு மேலும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. உலகப்
பொருளாதார நெருக்கடி குறித்து கவலை தெரிவித்துள்ள BRICS அமைப்பு, ஐரோப்பிய பொருளாதார
நெருக்கடி களையப்படுவதற்குத் தாங்கள் உதவத் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளது. தற்போது
உலகப் பொருளாதாரத்தில் 28 விழுக்காட்டையும், உலகப் பொருளாதார வளர்ச்சியில் 56 விழுக்காட்டையும்
BRICS அமைப்பு கொண்டுள்ளது. சிரியா மற்றும் இரான் குறித்த பிரச்சனைகளில் அமெரிக்கா
மற்றும் ஐரோப்பிய சமுதாய அவை கொண்டுள்ள நிலைப்பாட்டுக்கு எதிராகவும் இவ்வமைப்பு தனது
கருத்தை தெரிவித்திருக்கிறது. இரானைப் பொறுத்தவரை, இரான் அமைதி நோக்கங்களுக்கு அணுசக்தியைப்
பயன்படுத்திக்ள்வது அனுமதிக்கப்படவேண்டும் என்று BRICS கூறியுள்ளது.