2012-03-30 14:43:24

2013ம் ஆண்டின் உலக இளையோர் தினம், கிறிஸ்துவின் திறந்த கரங்களின் அனுபவத்தைப் பெறுவதாக இருக்கும்


மார்ச்30,2012. 2013ம் ஆண்டில் பிரேசிலின் Rio de Janeiroவில் நடைபெறவிருக்கும் உலக இளையோர் தினம், கிறிஸ்துவின் திறந்த கரங்களின் அனுபவத்தைப் பெறுவதாக இருக்கும் என்று கர்தினால் Stanislaw Rylko கூறினார்.
ரியோ டி ஜெனீரோவின் புறநகர்ப் பகுதியிலுள்ள Corcovado மீட்பராம் கிறிஸ்துவின் திருவுருவத்தை வைத்தே இந்த உலக இளையோர் தின அனுபவத்தைச் சொல்ல முடியும் என்றும் அவர் மேலும் கூறினார்.
இத்தாலியின் Rocca di Papa எனுமிடத்தில், திருப்பீட பொது நிலையினர் அவை நடத்தி வரும் இந்த இளையோர் தினத் தயாரிப்புக் கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்தார் அந்த அவைத் தலைவர் கர்தினால் Rylko.
இவ்வெள்ளியன்று தொடங்கிய இக்கூட்டம் வருகிற ஞாயிறன்று நிறைவடையும். இதில், 98 நாடுகளிலிருந்து 45 சர்வதேச கத்தோலிக்க இளையோர் கழகங்களின் சுமார் 300 பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.







All the contents on this site are copyrighted ©.