2012-03-29 15:57:38

நான்கு கத்தோலிக்க குருக்களுக்கு பங்களாதேஷ் நாட்டின் உயர்ந்த விருதுகள்


மார்ச்,29,2012. 1971ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராகப் போராடி, பங்களாதேஷ் நாடு தன் விடுதலையை அடைவதற்கு பெரும் உதவிகள் செய்த நான்கு கத்தோலிக்க குருக்களுக்கு அந்நாட்டின் உயர்ந்த விருதுகள் இச்செவ்வாயன்று வழங்கப்பட்டன.
பாகிஸ்தானுக்கு எதிராக, நாற்பது ஆண்டுகளுக்கு முன் பங்களாதேஷ் போராடியபோது, இந்தச் சுதந்திரப் போராட்டத்திற்குப் பல்வேறு வகையில் உதவியாக இருந்த 83 பேருக்கு 'பங்களாதேஷ் விடுதலைப் போர் விருதினை' அரசுத் தலைவர் Zillur Rahman வழங்கினார்.
விருது பெற்றவர்களில் அருள்தந்தையர் Richard Timm என்பவரும், Eugene Homrich என்பவரும் நேரடியாக இந்த விருதினைப் பெற்றுக் கொண்டனர். மறை சாட்சிகளாக இறந்த Mario Veronesi, William Evans என்ற வேறு இரு குருக்கள் சார்பில் இந்த விருதுகளை மற்றவர்கள் பெற்றுக் கொண்டனர்.
பங்களாதேஷ் சுதந்திரப் போராட்டத்தில் தங்களுக்கு உதவிய பல்வேறு நாட்டைச் சேர்ந்த நண்பர்களுக்கு இந்த விருது வழங்கும் விழாவின்போது பிரதமர் Sheikh Hasina தன் நன்றியைத் தெரிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.