2012-03-29 15:56:36

உயிர்ப்புத் திருநாளுக்காக லிபியா மக்கள் நம்பிக்கையுடன் தாயரிப்பதைக் காண முடிகிறது - அப்போஸ்தலிக்க நிர்வாகி


மார்ச்,29,2012. லிபியா நாட்டில் இயல்பு நிலை திரும்புவதற்காக, தவக்காலத்தின் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் மக்கள் பெருமளவில் கோவில்களில் கூடிவந்து செபிப்பது நம்பிக்கை தரும் அடையாளமாக உள்ளது என்று Tripoliயின் அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் Giovanni Innocenzo Martinelli கூறினார்.
42 ஆண்டுகள் நிகழ்ந்த சர்வாதிகார ஆட்சியாலும், கடந்த ஓராண்டளவாய் நிகழ்ந்துள்ள பல்வேறு போராட்டங்களாலும் மக்கள் மனம் தளர்ந்துள்ளனர் என்றாலும், உயிர்ப்புத் திருநாளுக்காக அவர்கள் நம்பிக்கையுடன் தாயரிப்பதைக் காணமுடிகிறது என்று ஆயர் Martinelli ஆசிய செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
பிலிப்பின்ஸ் மற்றும் சகாரா நாடுகளில் இருந்து குடிபெயர்ந்து, லிபியாவில் வாழும் கத்தோலிக்கர்கள், நாட்டில் உள்ள கிறிஸ்தவ சமுதாயத்திற்குப் பெரும் தூண்டுதலாக அமைந்துள்ளனர் என்றும் ஆயர் எடுத்துரைத்தார்.
கடந்த ஓராண்டளவாய் லிபியாவில் நிகழ்ந்துள்ள பல்வேறு கொடுமைகளின் மத்தியில் மருத்துவமனைகள் மூலம் கிறிஸ்தவர்கள் புரிந்த சேவை, கிறிஸ்துவத்திற்குச் சரியான ஒரு சாட்சியமாக லிபியாவில் விளங்குகிறது என்பதையும் Tripoliயின் அப்போஸ்தலிக்க நிர்வாகி சுட்டிக்காட்டினார்.








All the contents on this site are copyrighted ©.