புனித கன்னிமரியின் எடுத்துக்காட்டைப் பின்பற்றி, இயேசு கிறிஸ்து என்ற பாறையின்மீது வாழ்வை
கட்டி எழுப்ப திருத்தந்தை அழைப்பு
மார்ச்28,2012. எல் கோப்ரே அன்னைமரி திருத்தலத்தின் வெளியே காத்திருந்த பல்லாயிரக்கணக்கானப்
பக்தர்களை ஆசீர்வதித்த திருத்தந்தை, எல் கோப்ரே அன்னைமரியா, அனைத்து கியூபா மக்களுக்கும்
விண்ணிலிருந்து கிடைத்த கொடை. இவ்வன்னை மரியா, உங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கவும், துன்புறும்
மக்களுக்கு உதவவும், அவர்களை வழிநடத்தவும், வருங்காலத்தில் வறுமை குறைந்து அதிகச் சுதந்திரத்துடன்
கியூபா மக்கள் வாழவும் வேண்டுமென செபித்தேன். திருத்தந்தையின் பாசத்தைப் பெற்று, அதனை
உங்களது இடங்களுக்கு எடுத்துச் செல்லுங்கள். அதனால் ஒவ்வொருவரும் விசுவாசத்தில் ஆறுதலும்
உறுதியும் பெறுவார்கள். புனித கன்னிமரியின் எடுத்துக்காட்டைப் பின்பற்றி, நீங்கள் உங்களது
வாழ்வை இயேசு கிறிஸ்து என்ற உறுதியான பாறையின்மீது தொடர்ந்து கட்டி எழுப்ப ஊக்கப்படுத்துகிறேன்.
நீதிக்காக உழையுங்கள், பிறரன்பின் பணியாளர்களாக இருங்கள், சோதனைகளின் மத்தியில் உறுதியாய்
இருங்கள், கியூப மண்ணின் பண்பாகிய உங்களது அக மகிழ்ச்சியை எதுவும் யாரும் பறித்துச் செல்லாதபடிப்
பார்த்துக் கொள்ளுங்கள். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக, மிக்க நன்றி என்று சொல்லி அவர்களிடமிருந்து
விடைபெற்றார்.