ஐ.நா. தந்த அமைதி திட்டங்களுக்கு சிரிய அரசு ஒப்புதல்
மார்ச்,28,2012. சிரிய அரசுடன் முன்னாள் ஐ.நா.பொதுச் செயலர் Kofi Annan அண்மையில் மேற்கொண்ட
பேச்சுவார்த்தைகளின் பயனாக, ஐ.நா. தந்த அமைதி திட்டங்களுக்கு ஒப்புக்கொண்டுள்ளதாக இச்செவ்வாயன்று
சிரிய அரசு கூறியது. சிரிய அரசின் இந்த ஒப்புதல் அந்நாட்டில் வன்முறை நீங்கி, அமைதி
திரும்புவதற்கு முதல் படி என்று கூறினார் ஐ.நா. முன்னாள் பொதுச் செயலர் Kofi Annan. சிரிய
அரசுத் தலைவர் இத்திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது நம்பிக்கை தரும் ஒரு பெரும் அடையாளம்
என்று சிரியாவில் பணிபுரியும் இயேசுசபை அருள்பணியாளர் Nawras Sammour, ஆசிய செய்தி நிறுவனத்திடம்
கூறினார். ஐ.நா. பரிந்துரைத்துள்ள இந்த அமைதி திட்டத்தில் வன்முறைகள் நிறுத்தப்படுதல்,
மனிதாபிமான உதவிகள் மக்களைச் சென்றடைய அனுமதி வழங்குதல், விசாரணையின்றி கைது செய்யப்பட்டுள்ளவர்கள்
உடனடியாக விடுதலை செய்யப்படுதல் போன்ற ஆறு அம்சங்கள் கூறப்பட்டுள்ளன.