2012-03-27 16:18:32

கடவுளில் நிலைத்திருங்கள்-மெக்சிகோ மக்களுக்குத் திருத்தந்தை அறிவுரை


மார்ச்27,2012. அன்பு மெக்சிகோ நண்பர்களே, "Adios!" என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். அதாவது கடவுளில் நிலைத்திருங்கள், நாம் ஒருவர் ஒருவரைச் சந்திக்கும் மற்றும் ஒருவர் ஒருவரைச் சந்திக்கவிருக்கின்ற கிறிஸ்துவின் அன்பில் எப்போதும் நிலைத்திருங்கள். நம் ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக. அன்னைமரியா உங்களைப் பாதுகாப்பாராக. உங்களின் எண்ணற்ற விருந்தோம்பல்கள், உங்களது பாசமழை என மறக்க முடியாத அனுபவங்களால் நிறைந்து உங்களைவிட்டுச் செல்கிறேன். தனிப்பட்ட மற்றும் சமுதாய வாழ்க்கையில் அனைவரின் நலனில் அக்கறை கொண்டவர்களாய், இதில் நீங்கள் உங்களது பொறுப்புணர்வை உணர்ந்தவர்களாய், நல்ல குடிமக்களாக வாழுங்கள் என்றார் திருத்தந்தை.







All the contents on this site are copyrighted ©.