யாரை நம்புவது பாலூட்டி வளர்த்த தாயை பள்ளிக்கு அழைத்துச் சென்ற தந்தையை பாசத்தால்
பரவசமூட்டும் நண்பரை பாதி வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ளும் இல்லாளை இவர்களுக்கும்
மேலாக.... யாரை நம்புவது.... உனக்குள் இருக்கும் உன் மன சக்தியை உனக்கு உதவியனைத்தும்
செய்து உன்னைச் சர்வ வல்லமையாக்கும் உன் உள்மன ஆற்றலை.... உன் மனத்தைத் தட்டிக்
கொடு, தடவிக் கொடு வலிமையாக்கு, தளர விடாதே உன்னையே உணர்ந்து கொள் உலகம் உன்
கைவசம்.
நல்லவே எண்ணல் வேண்டும்! திண்ணிய நெஞ்சம் வேண்டும் தெளிந்த நல்
அறிவு வேண்டும்! வேண்டினார் மகாகவி பாரதி. நான் வேண்டுகிறேன்..... என்னையறிய
எனக்கருள் புரியும். என் மன சக்தி அறிய என்னை வழி நடத்தும் இறைவா.