2012-03-26 15:51:04

2014ல் இந்தியாவின் அனைத்து கிராமங்களுக்கும் தொலைபேசி வசதி


மார்ச்,26,2012. நாட்டின் அனைத்து கிராமங்களுக்கும் வரும் 2014ம் ஆண்டிற்குள் தொலைபேசி வசதி ஏற்படுத்தப்படும் எனவும், அதற்கென ஏறத்தாழ 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது எனவும் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் உயர் அதிகாரி உடையப்பா தெரிவித்துள்ளார்.
தேசிய ஆப்டிக்கல் பைபர் நெட்ஒர்க் மூலம் இண்டர்நெட் சேவை வழங்கப்பட்டு, இதன் மூலம் வங்கி, சுகாதாரம் மற்றும் அனைத்து அடிப்படை வசதிகளும் ஆன்லைன் மூலம் அனைத்து கிராமங்களுக்கும் கிடைக்க வாய்ப்பு ஏற்படும் என்று கூறிய அவர், நகர்புறங்களில் 100 விழுக்காடு அளவிலும், கிராமப்புறங்களில் 37 விழுக்காடு அளவிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது என உரைத்தார்.
பி.எஸ்.என்.எல். நிறுவனம் 80 விழுக்காடு தரை வழி இணைப்புகளையும் 90 விழுக்காடு பிராட்பேண்ட் இணைப்புகளையும் கொண்டுள்ளது. 30 விழுக்காடு அளவிற்கு மொபைல் இணைப்புகளையும் கொண்டுள்ளது குறிப்படத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.