2006ம் ஆண்டு பாக்தாத் நகர் குண்டு வெடிப்பில் தாக்கப்பட்ட அன்னை மரியா ஆலயம் மீண்டும்
புதுப்பிக்கப்பட்டது
மார்ச்,26,2012. ஈராக்கில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நிலவி வரும் வன்முறைகளால் கிறிஸ்தவர்களின்
எண்ணிக்கை குறைந்து வந்தாலும், தற்போது நாட்டில் வாழும் கிறிஸ்தவர்களின் சாட்சிய வாழ்வு
பெருமைக்குரியதாய் உள்ளது என்று Kirkukல் உள்ள கல்தேய ரீதிப் பேராயர் லூயிஸ் சாக்கோ கூறினார். 2006ம்
ஆண்டு பாக்தாத் நகர் குண்டு வெடிப்பில் தாக்கப்பட்ட அன்னை மரியா ஆலயம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு,
அண்மையில் இவ்வாலயத்தில் மீண்டும் திருப்பலி நிகழ்த்திய பேராயர் சாக்கோ கூடியிருந்த மக்களிடையே
இவ்வாறு கூறினார். 2006ம் ஆண்டு சனவரி 29ம் தேதி இவ்வாலயம் தாக்கப்பட்டபோது, Fadi
Raad Elias என்ற 13 வயது சிறுவன் கொல்லப்பட்டான். திருப்பலியில் பீடச்சிறுவனாக அடிக்கடி
பங்கேற்ற Elias, தான் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்றதற்காக இறைவனுக்கு நன்றி செலுத்த
கோவிலுக்குச் சென்றிருந்தபோது இந்த குண்டு வெடிப்பு நடந்ததால், அவ்விடத்திலேயே அவன் கொல்லப்பட்டான். சிறுவன்
Elias தன் கிறிஸ்தவ விசுவாசத்திற்கு சாட்சியாக இறந்தான் என்பதைக் கூறிய பேராயர் சாக்கோ,
Elias மற்றும் பல கிறிஸ்தவர்களின் மரணம் ஈராக்கில் வாழும் கிறிஸ்தவர்களுக்கு தூண்டுதலாக
அமைந்துள்ளது என்று கூறினார்.