2012-03-23 15:12:01

விருந்தினர்களுக்கு உயர்ந்த மரியாதை வழங்குவதே இந்திய மரபு - கட்டக் புபனேஸ்வர் பேராயர்


மார்ச்,23,2012. விருந்தினர்களுக்கு உயர்ந்த மரியாதை வழங்குவதே இந்திய மரபு என்றும், இப்படிப்பட்ட கலாச்சாரத்திற்குப் புகழ்பெற்ற இந்தியாவில் இரு இத்தாலியர்கள் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது என்றும் கட்டக் புபனேஸ்வர் பேராயர் ஜான் பார்வா கூறினார்.
மார்ச் 14ம் தேதியிலிருந்து ஓடிஸா மாநிலத்தில் மாவோயிஸ்ட் எனப்படும் போராட்டக் குழுவினரால் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டிருக்கும் இரு இத்தாலியர்களை விடுவிக்கும் முயற்சியில் ஓடிஸா மாநில அரசு ஈடுபட்டுள்ளது.
பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டிருக்கும் இருவரின் குடும்பங்கள் படும் வேதைனையில் நாங்களும் பங்கேற்கிறோம் என்று கூறிய பேராயர் பார்வா, ஓடிஸா மாநிலத்தில் நிகழும் போராட்டங்களில் எவ்வகையிலும் தொடர்பு இல்லாத இருவர் கைது செய்யப்பட்டிருப்பது முற்றிலும் தவறு, எனவே, அவர்கள் மனிதாபிமான அடிப்படையில் உடனே விடுவிக்கப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
தலத் திருஅவையும், இன்னும் சில அரசுசாரா அமைப்புக்களும் மாவோயிஸ்ட் குழுவினருடன் சமரச முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்று வெளியான செய்தியை மறுத்துப் பேசிய பேராயர் பார்வா, இந்தக் கடத்தலின் பின்னணியில் உள்ள முழு உண்மையை அறிந்து தீர்வு காண வேண்டியது அரசின் கடமை என்றும் எடுத்துரைத்தார்.








All the contents on this site are copyrighted ©.