2012-03-22 15:21:46

மெக்சிகோ மற்றும் கியூபாவுக்கானத் திருத்தந்தையின் திருப்பயணம்


மார்ச்22,2012. மெக்சிகோ மற்றும் கியூபாவுக்கு ஆறு நாள்கள் கொண்ட தனது மேய்ப்புப்பணி திருப்பயணத்தை இவ்வெள்ளியன்று தொடங்குகிறார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இவ்வெள்ளி உள்ளூர் நேரம் காலை 9.30 மணிக்கு உரோம் ஃபியுமிச்சினோ பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து ஆல் இத்தாலியா விமானத்தில் புறப்படும் திருத்தந்தை, 14 மணி நேரம் விமானப்பயணம் செய்து மெக்சிகோ நாட்டு Guanajuato பன்னாட்டு விமான நிலையத்தை அடையும் போது அந்நாட்டு நேரம் இவ்வெள்ளி மாலை 4 மணி 30 நிமிடங்களாக இருக்கும். மெக்சிகோவுக்கும் இத்தாலிக்கும் இடையேயுள்ள கால இடைவெளி 7 மணியாகும்.
மெக்சிகோ நாட்டின் Guanajuato, Leon ஆகிய இரு நகரங்களில் திருப்பயணத் திட்டங்களை நிறைவேற்றும் திருத்தந்தை, மெக்சிகோ சுதந்திரம் அடைந்ததன் 200வது ஆண்டைச் சிறப்பிக்கும் திருப்பலி இப்பயணத்தின் முத்தாய்ப்பாக இருக்கும்.
Leon நகரத்தில் இந்த 200வது ஆண்டின் நினைவாக அமைக்கப்பட்டிருக்கும் தேசியப் பூங்காவில் இஞ்ஞாயிறு காலை 10 மணியளவில் விழாத் திருப்பலியை நிகழ்த்துவார் திருத்தந்தை.
வருகிற திங்களன்று, மெக்சிகோ நாட்டின் Guanajuato விலிருந்து கியூபா செல்லும் திருத்தந்தை, கியூபாவில், கோர்தோபா அன்னைமரி திருவுரும் கண்டுபிடிக்கப்பட்டதன் 400ம் ஆண்டைச் சிறப்பிக்கும் திருப்பலியை நிகழ்த்துவார்.
கியூபாவில் திருப்பயண நிகழ்வுகளை நிறைவு செய்து வருகிற வியாழன் காலை 10.15 மணியளவில் உரோம் வந்து சேர்வார் திருத்தந்தை.
இத்தாலிக்கு வெளியே திருத்தந்தை மேற்கொள்ளும் இந்த 23 வது வெளிநாட்டுத் திருப்பயணம் 23வது நாட்டுக்குச் செல்வதாக அமைகின்றது.








All the contents on this site are copyrighted ©.