2012-03-22 15:22:24

பேராயர் ஆஸ்கர் ரொமேரோ அவர்கள் இறந்த நாளான, மார்ச் 24ம் தேதி, செபம் மற்றும் நோன்பு நாளாகக் கடைபிடிக்கப்படும்


மார்ச்,22,2012. பேராயர் ஆஸ்கர் ரொமேரோ அவர்கள் இறந்த நாளான, மார்ச் 24ம் தேதி, இச்சனிக்கிழமை, செபம் மற்றும் நோன்பு நாளாகக் கடைபிடிக்கப்படும் என்று இத்தாலிய பாப்பிறை மறைபரப்புப்பணிக் கழகத்தின் இளையோர் அணி அறிவித்துள்ளது.
1980ம் ஆண்டு மார்ச் மாதம் 24ம் தேதி கொலையுண்ட பேராயர் ரொமேரோவின் நினைவாக 1993ம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த இளையோர் அணி, ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 24ம் தேதியன்று நற்செய்திப் பணிக்கென தங்கள் உயிரை இழந்தோரை நினைவு கூர்ந்து, அந்நாளை ஒரு செப, நோன்பு நாளாகக் கடைப்பிடித்து வருகிறது. இவ்வாண்டு, இம்முயற்சி ஆரம்பித்து 20 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
"இறுதிவரை அன்பு கூர்தல்" என்ற மையப்பொருளுடன் கடைபிடிக்கப்படும் இந்த இருபதாம் ஆண்டு நிறைவில் கலந்து கொள்ள உலகின் அனைத்து மறைமாவட்டங்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது இந்த இளையோர் அமைப்பு.








All the contents on this site are copyrighted ©.