உலகில் மிகவும் அரிதான ஒரு பொருளாக நீர் மாறிவருவதால், நீரைப் பகிர்வதற்கு
நாடுகளுக்குள் போர் மூளும் ஆபத்து
மார்ச்,22,2012. உலகில் மிகவும் அரிதான ஒரு பொருளாக நீர் மாறிவருவதால், நீரைப் பகிர்வதற்கு
நாடுகளுக்குள் போர் மூளும் சூழல்கள் உருவாகலாம் என்று பான் கி மூன் கூறினார். மார்ச்
22 உலக தண்ணீர் தினம் கடைபிடிக்கப்படுவதையொட்டி செய்தி வெளியிட்ட ஐ.நா.பொதுச் செயலர்
பான் கி மூன், உலகில் 80௦ கோடி மக்கள் சுத்தமான நீர் இன்றியும், 100 கோடி பேர் உணவின்றியும்
வாடிவருவதைத் தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். நாடுகளிடையிலும், நாட்டுக்குள் ஒவ்வொரு
பகுதிகளுக்கிடையிலும் தண்ணீர் பங்கீடு குறித்து எழுந்துவரும் மோதல்களைக் குறிப்பிட்டுப்
பேசிய ஐ.நா.பொதுச் செயலர், இந்தப் பிரச்சனைகள் போர்களாக உருவாகும் ஆபத்தும் உள்ளது என்று
எடுத்துரைத்தார். இவ்வாண்டு கடைபிடிக்கப்படும் உலக தண்ணீர் தினத்திற்கு, "தண்ணீரும்
உணவு பாதுகாப்பும்" என்ற மையப்போருளை ஐ.நா. அமைப்பு குறித்துள்ளது. இவ்வாண்டு ஜூன்
மாதம் Rio+20 என்று ரியோ டி ஜெநீரோவில் நடைபெற உள்ள உலக முன்னேற்ற உச்சி மாநாட்டில் கலந்து
கொள்ளவிருக்கும் அனைத்து நாடுகளும், தண்ணீர், உணவு, எரிசக்தி ஆகிய அனைத்து வசதிகளும்
உலக மக்கள் அனைவருக்கும் நீதியான முறையில் கிடைக்க உழைக்க வேண்டும் என்ற அழைப்பையும்
ஐ.நா.பொதுச் செயலர் விடுத்துள்ளார்.