மார்ச்,21,2012. கடந்த சனிக்கிழமை இறைபதம் அடைந்த எகிப்தின் காப்டிக் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களின்
திருத்தந்தையும், அலெக்சாந்திரியாவின் முதுபெரும் தலைவருமான 3ம் Shenoudaவின் நல்லடக்கம்
இச்செவ்வாயன்று நடைபெற்றது. இஞ்ஞாயிறு, மற்றும் திங்கள் ஆகிய இரு நாட்கள் கெய்ரோவில்
உள்ள புனித மாற்கு பேராலயத்தில், மக்களின் வணக்கத்திற்கு வைக்கப்படிருந்த முதுபெரும்
தலைவரின் உடல், கெய்ரோவில் இருந்து 100 கி.மீ தூரத்தில், Wadi Natroun நகரில் உள்ள புனித
Bishoy துறவு மடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இவ்வடக்கச் சடங்கில் பத்தாயிரத்திற்கும்
அதிகமானோர் கலந்து கொண்டனர் என்று ஊடகங்கள் கூறுகின்றன. 40 ஆண்டுகளுக்கும் மேல் முதுபெரும்
தலைவராக பணியாற்றிய 3ம் Shenoudaவின் மறைவுக்கு, திருத்தந்தை உட்பட பல மதத் தலைவர்களும்,
நாட்டுத் தலைவர்களும் அனுதாபச் செய்திகளை அனுப்பியுள்ளனர். அலெக்சாந்திரியாவின் முதுபெரும்
தலைவர் 3ம் Shenoudaவின் அடக்க நாள் எகிப்தில் ஒரு துக்க நாளாக கடைபிடிக்கப்பட்டதால்,
அங்குள்ள கட்டிடங்களில் நாட்டுக் கோடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டன.