2012-03-17 15:11:36

இந்தியாவில் 18 வயதிற்குள் தாயாவோர் 22 விழுக்காடு


மார்ச்17,2012. இந்தியப் பெண்களில், 22 விழுக்காட்டினர் 18 வயதிற்குள் தாயாகி விடுவதாகவும், அவர்கள் பெற்றெடுக்கும் குழந்தைகளில் மூன்றில் ஒரு குழந்தை, குறைந்த எடை கொண்டதாக உள்ளதாகவும் யுனிசெப் என்ற ஐ.நா குழந்தைநல அமைப்பு அறிவித்தது.
ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் குறித்து எடுக்கப்பட்ட ஆய்வில், 43 விழுக்காட்டுக் குழந்தைகள் குறைந்த எடை உள்ளவர்களாகவும், 16 விழுக்காட்டுக் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு உடையவர்களாகவும், 48 விழுக்காட்டுக் குழந்தைகள் வயதிற்கேற்ற வளர்ச்சி இல்லாத நிலையிலும் உள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.
இந்தியாவின் சேரிப்பகுதிகளில் பிறக்கும் குழந்தை, தனது முதலாவது பிறந்தநாளை கொண்டாடுவதற்கு முன்னதாகவே, குறைந்த எடை அல்லது இரத்தசோகை காரணமாக இறந்து விடுவதாக அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.