குறுநில விவசாயிகளின் திறமைகள் வெளிக்கொணரப்பட வேண்டும் - பான் கி மூன்
மார்ச்16,2012. உணவுப் பாதுகாப்பை அனைவருக்கும் உறுதிப்படுத்தும் நோக்கத்தில், குறுநில
விவசாயிகள் மற்றும் உணவு உற்பத்தியாளர்களின் திறமைகள் வெளிக்கொணரப்பட வேண்டும் என்று
ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கேட்டுக் கொண்டார். ஏறக்குறைய 20 கோடிச் சிறார்,
ஊட்டச்சத்துப் பற்றாக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளவேளை, சிறாருக்கும் பெண்களுக்கும் சத்துணவு
கிடைக்க வழிசெய்யப்பட வேண்டுமெனவும் கேட்டுள்ள பான் கி மூன், சந்தைகள் நியாயமானதாகவும்
எல்லாருக்கும் உதவக்கூடியதாகவும் இருக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார். உணவைப் பெறுவதற்கு
எல்லாருக்கும் இருக்கும் உரிமையை அனைவரும் அனுபவிக்க வேண்டுமென்றும் கூறிய அவர், ஒவ்வொரு
வீட்டிற்கும் சத்துணவு கிடைப்பதற்கு வசதி செய்யப்படுமாறும் கேட்டுக் கொண்டார். சத்துணவு
குறித்து நடைபெற்று வரும் உயர்மட்டக் குழு கூட்டத்திற்கு அனுப்பிய செய்தியில் இவ்வாறு
குறிப்பிட்டுள்ளார் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன்.