2012-03-15 15:34:16

திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள் அருளாளராக உயர்த்தப்பட்ட நிகழ்வு முப்பரிமாணத் திரைப்படமாக வெளியிடப்படும்


மார்ச்,15,2012. தொடர்புத் துறையில் ஒவ்வொரு புதிய தொழில் நுட்பமும் வளரும்போது, அவற்றுடன் இணைந்து செல்ல திருஅவை முயன்று வருகிறது என்று திருப்பீடப் பேச்சாளர் அருள்தந்தை Federico Lombardi கூறினார்.
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள் அருளாளராக உயர்த்தப்பட்ட நிகழ்வை முப்பரிமாணத் திரைப்படமாக வெளியிடும் முதல் முயற்சியாக இப்புதனன்று பத்திரிக்கையாளர்களுக்கு இத்திரைப்படம் காட்டப்பட்டபோது, இயேசு சபை அருள்தந்தை லொம்பார்தி இவ்வாறு கூறினார்.
இத்தாலிய தொலைக்காட்சி நிறுவனமான RAI வெளியிடவிருக்கும் இந்த முப்பரிமாணத் திரைப்படம் 22 நிமிடங்கள் ஓடக்கூடியது. இத்திரைப்படம் RAI நிறுவனத்தால் வருகிற ஏப்ரல் முதல் தேதி முதல் திரையிடப்படும்.
RAI தொலைக்காட்சி நிறுவனமும், வத்திக்கானும் இதுவரைத் தொடர்ந்து வந்துள்ள பயணத்தில் இன்னும் பல புதிய கண்டுபிடிப்புக்கள் இன்னும் வெளிவரும் வாய்ப்புக்கள் உள்ளன என்று அருள்தந்தை லொம்பார்தி செய்தியாளர்களிடம் எடுத்துரைத்தார்.








All the contents on this site are copyrighted ©.