2012-03-13 15:36:11

சிரியாவின் இன்றைய நிலைகள் குறித்து அப்போஸ்தலிக்க நிர்வாகி


மார்ச்,13,2012. சிரியாவில் அமைதியை வளர்க்கும் ஒரு முயற்சியாக, போர் நிறுத்தத்தையும் பேச்சுவார்த்தைகளையும் அரசும் எதிர்க்கட்சியும் ஏற்க மறத்துள்ளது குறித்து தன் கவலையை வெளியிட்டுள்ளார் அந்நாட்டின் அலெப்போ நகர் அப்போஸ்தலிக்க நிர்வாகி குரு ஜோசப் நட்சாரோ.
மேற்கத்திய நாடுகளின் தலையீடு குறித்தும் தன் விமர்சனங்களை வெளியிட்ட அவர், ஒரு பகுதியில் சமூக கலாச்சார மாற்றங்களைப் புகுத்துவது என்பது உடனடியாக நிகழ்வதல்ல, அதற்கு பல நூற்றாண்டுகள் ஆகலாம் என்றார்.
மனித உரிமைகள் மதிக்கப்படவேண்டும் என்ற கேள்வி சிரியாவை மட்டும் நோக்கி எழுப்பப்படுவது ஏன் என்ற கேள்வியை எழுப்பிய அப்போஸ்தலிக்க நிர்வாகி குரு நட்சாரோ, மனித உரிமைகள் தொடர்புடையவைகளில் சிரியாவுக்கு எதிராக ஐ.நா.வில் வாக்களிக்கும் சில நாடுகளே தங்கள் நாடுகளில் மனித உரிமைகளை மீறி வருகின்றன என மேலும் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.