“தண்ணீர் வாழ்வுக்கு முக்கிய ஆதாரம்” : திருப்பீடக் கையேடு
மார்ச்10,2012. பிரான்சின் Marseilleலில் வருகிற திங்களன்று தொடங்கும் ஆறாவது உலகத் தண்ணீர்
மாநாட்டிற்குத் தனது பங்களிப்பாக, “தண்ணீர் வாழ்வுக்கு முக்கிய ஆதாரம்” என்ற தலைப்பில்
ஒரு சிறிய கையேட்டை வெளியிட்டுள்ளது திருப்பீடம். உலகத் தண்ணீர் அவையினால் மூன்று
ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இவ்வுலக மாநாட்டில், தண்ணீர் தொடர்புடைய பல்வேறு விவகாரங்கள்
குறித்து, பல்வேறு தனிப்பட்ட மற்றும் பொது நிறுவனப் பிரதிநிதிகள் கலந்து பேசுவார்கள். Marseilleல்
இம்மாதம் 12 முதல் 17 வரை நடைபெறவிருக்கும் இம்மாநாட்டிற்கென கையேடு ஒன்றை வெளியிட்டுள்ள
திருப்பீட நீதி மற்றும் அமைதி அவை, உலகில் அனைவருக்கும் சுத்தக் குடிநீர் கிடைப்பதற்கும்,
நீர் வளங்கள் பொறுப்புடன் நிர்வகிக்கப்படுவதற்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்ற
போதிலும், உலகின் பாதி மக்கள் சுத்தக் குடிநீர் கிடைப்பதற்கு இன்னும் போதுமான வசதிகளைப்
பெறவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.