2012-03-10 14:04:56

கடந்த ஆண்டு சுனாமியில் இறந்தவர்களுக்காகச் செபிக்குமாறு ஜப்பான் பேராயர் வேண்டுகோள்


மார்ச்10,2012. உலக வரலாற்றில் இடம் பெற்றுள்ள மிகக் கொடூரமான இயற்கைப் பேரிடர்களில் ஒன்றான ஜப்பானில் கடந்த ஆண்டு இடம் பெற்ற நிலநடுக்கம், சுனாமி ஆகியவற்றில் இறந்தவர்களுக்காகச் செபிக்குமாறு கத்தோலிக்கரைக் கேட்டுள்ளார் ஜப்பான் பேராயர் Leo Jun Ikenaga.
ஜப்பானில் 2011ம் ஆண்டு மார்ச் 11ம் தேதி நடைபெற்றதை நம் வாழ்நாளில் மறக்க முடியாது என்று ஜப்பானிய கத்தோலிக்கருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் பேராயர் Ikenaga.
நிலநடுக்கம், சுனாமி ஆகியவற்றில் பாதிக்கப்பட்ட பகுதிகள் மீண்டும் கட்டி எழுப்பப்படுமாறு செபிப்பதோடு, இப்பேரிடரில் இறந்தவர்களுக்கு இறைவன் நித்திய சாந்தியை அளித்தருளுமாறு செபிக்கவும் கேட்டுள்ளார் பேராயர் Ikenaga.
கடந்த ஆண்டு ஜப்பானில் இடம் பெற்ற இயற்கைப் பேரிடரில் ஏறக்குறைய இருபதாயிரம் பேர் இறந்தனர்.







All the contents on this site are copyrighted ©.