2012-03-06 15:14:18

கவிதைக் கனவுகள் - கற்பவை கசடறக் கற்றிடுவோம்


கற்க கசடறக் கற்பவை...
அற்புத வள்ளுவன் வார்த்தைகள்...
பள்ளிச் சுவர்களில் மின்னிடும்
வெள்ளியில் பொறித்த வார்த்தைகள்...

கசடறக் கற்பது சாத்தியமா?
கசடே கல்வியின் சாத்திரமா?
கவலை எழுப்பும் கேள்விகள்...
கனவைப் புதைக்கும் தோல்விகள்...
கல்வியில் கசடுகள் கலந்ததேன்?
விடைகள் தேடும் தேவைகள்...

கலப்படம் மிகுந்திடும் வேளைகளில்
கசடையும் கடைச் சரக்காக்கிடுமே
கவலைதரும் வர்த்தகமே

கல்வியில் வர்த்தகம் கலந்ததனால்
கல்வியில் கலப்படம் கூடியதே...
கல்வியே கசடென மாறியதே...

வர்த்தகச் சிறைகளில் வாடிவரும்
கல்வியின் விடுதலை கண்டிடுவோம்
கற்பவை கசடறக் கற்றிடுவோம்
கற்றபின் கசடற வாழ்ந்திடுவோம்.








All the contents on this site are copyrighted ©.