2012-03-05 15:04:47

கவிதைக் கனவுகள்...... ஆசை அகன்றுவிட ...


ஆசை ஆசை ஆசை
ஐந்திலும் ஆசை ஐம்பதிலும் ஆசை
ஐந்து காசிலும் ஆசை
ஐம்பது இலட்சத்திலும் ஆசை
ஐந்தைக் கண்டெடுத்தவர்
ஐம்பதுக்காக அலைகிறார்
ஐம்பதை அடைந்தவர் அயராது ஓடுகிறார்
ஆசை ஆசை ஆசை
அது பேராசை.

பணத்துக்கு ஆசைப்பட்டவர்
பணத்தாலே பிணமாகிறார்
பிணத்தையும் தோண்டுகிறார்
பணம் கிடைக்கும் என்ற ஆசையில்.
ஆசை தந்த பரிசு துர்நாற்றம்
துர்நாற்றம் தந்த பரிசு நுண்கிருமிகள்
நுண்கிருமிகள் தந்த பரிசு நோய்கள்
நோய்கள் தந்த பரிசு பணயிழப்பு
ஆசை ஆசை ஆசை
அது மண்ணாசை பொன்னாசை பெண்ணாசை.

மண்ணாசைக்கு அடிமைப்பட்டவர்
மனிதரைக் கொல்லும் பாவத்தில்
பொன்னாசைக்கு அடிபணிந்தவர்
பொருள் திருடும் பாவத்தில்.
பெண்ணாசையில் சறுக்கியவர்
இழந்தார் இருப்பது அனைத்தையும்!.

மனித வாழ்க்கை நகர்கிறது ஆசையில்
நம்பிக்கையில்.
ஆசையை அறுக்கத்
தேவை போதுமென்ற மனது.
ஆசை நின்றுவிட உதயமாகின்றது
சுய தரிசனம்.
தன்னையறிதலில் கிடைக்கின்றது
தரணி படைத்தான் தரிசனம்.
எதிர்பார்ப்பதைக் குறைத்துக்கொள்
வருவது மனதை நிறைய வைக்கும்
சொல்கின்றன சமயங்கள்.
உன்னையே உன் கட்டுக்குள் வை
இதுவே ஆசையை அடக்கியாள வழி.








All the contents on this site are copyrighted ©.