பாகிஸ்தானில் வகுப்புவாத வன்முறை நிறுத்தப்பட்டு சிறுபான்மை மதத்தவர் பாதுகாக்கப்படுவதற்கு
ஐ.நா.மனித உரிமை வல்லுனர்கள் வலியுறுத்தல்
மார்ச்03,2012. பாகிஸ்தானில் இடம் பெறும் வகுப்புவாத வன்முறை நிறுத்தப்பட்டு சிறுபான்மை
மதத்தவர் பாதுகாக்கப்படுவதற்கு நடவடிக்கைகளை எடுக்குமாறு அந்நாட்டு அரசைக் கேட்டுள்ளனர்
ஐ.நா.மனித உரிமை வல்லுனர்கள். இரண்டு வாரங்களுக்குள் இரண்டு வன்முறை நிகழ்வுகள் இடம்
பெற்றதையும், அவை சிறுபான்மை மதத்தவரையே குறி வைத்து நடத்தப்பட்டதையும் சுட்டிக் காட்டிய,
ஐ.நா.மனித உரிமை வல்லுனர்கள் குழு ஒன்று, இவ்வன்முறைகள் அதிர்ச்சியூட்டுகின்றன என்று
குறிப்பிட்டுள்ளது. இச்செவ்வாயன்று குறைந்தது 18 ஷியா முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர்
என்றுரைத்த அக்குழு, குற்றவாளிகள் மீது சரியான நடவடிக்கை எடுக்கப்பட்டு நாட்டில் பாதுகாப்பு
நடவடிக்கைகளை உறுதிப்படுத்த வேண்டுமென பாகிஸ்தான் அரசைக் கேட்டுள்ளது.