2012-03-03 13:07:16

சிரியா: செஞ்சிலுவைச் சங்க உதவிப் பணியாளர்களுக்கு அனுமதி மறுப்பு


மார்ச்03,2012. சிரியாவின் ஹோம்ஸ் நகரத்தில், புரட்சியாளர்களின் கட்டுப்பாட்டுக்கள் இருந்த Baba Amr பகுதிக்குள் செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவிப் பணியாளர்கள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கூறுகிறது.
அந்தப் பகுதிக்குள் நிறையப் பேர், உதவியை பெரிதும் நம்பிக் காத்திருக்கிறார்கள் என்பதால், தங்களுக்கு அனுமதி மறுப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு முடிவு என செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு மாத காலமாக சிரிய அரசுப் படைகளால் கடுமையானத் தாக்குதலுக்கும் ஆக்ரமிப்புக்கும் உள்ளாகியிருக்கும் பகுதி பாபா அம்ர் ஆகும்.
சிரியாவின் செம்பிறை சங்கத்துடன் இணைந்து இப்பகுதியில் இருக்கின்ற காயம்பட்ட மற்றும் நோய்வாய்ப்பட்ட மக்களை வெளியே கொண்டுவந்து உதவிகள் வழங்குவது செஞ்சிலுவைச் சங்கத்தின் நோக்கமாகும்.







All the contents on this site are copyrighted ©.