Home Archivio
2012-03-03 15:43:17
கவிதைக் கனவுகள்... மலைகள் சொல்லித்தரும் மந்திரங்கள்
இறைவன் கண்ட படைப்பில்
இனிது அனைத்தும் என்றார்.
இயற்கை அனைத்தும் உயர்வே...
உயர்வைத் தன் இயல்பாய் கொண்ட
மலைகள் சொல்லித்தரும் மந்திரங்கள்
மனிதருக்கு நல்ல பாடங்கள்
மனிதர்கள் மனது வைத்தால்,
துணிவுடன் முயற்சி செய்தால்,
வானத்தையும் தொடலாம் என்ற
ஞானத்தைச் சொல்வது மலைகளே...
வானத்தில் ஓடியாடும் மேகங்களை
சீண்டி விளையாடும் சிகரங்கள்...
அந்தச் சீண்டலில் சிலிர்த்திடும் மேகங்கள்
சிந்திடும் சிரிப்பே மழைத் துளிகள்.
தன்னை நனைக்கும் மழைத்துளி
தனக்கே தனக்கென தடைசெய்யாமல்
தரணியெல்லாம் மகிழும் வண்ணம்
அருவியாய்க் கொட்டிடும்
அற்புத வள்ளல்... மலைகளே.
மலைகள் சொல்லித்தரும் மந்திரங்கள்
மனிதருக்கு நல்ல பாடங்கள்
All the contents on this site are copyrighted ©.