2012-03-03 13:05:10

CAFOD - தவக்காலம்,நோன்பு காலம்


மார்ச்03,2012. சுத்தமற்றத் தண்ணீரால் ஒவ்வொரு 20 வினாடிகளுக்கும் ஒரு குழந்தை இறக்கின்றது என்று பிரிட்டன் பிறரன்பு நிறுவனம் CAFOD கூறியது.
உலகில் 88 கோடியே 40 இலட்சம் பேர் சுத்தத் தண்ணீரும் நலவாழ்வு வசதிகளின்றியும் வாழ்கின்றனர் என்றுரைத்த CAFOD நிறுவனம், இத்தவக்காலத்தில் இம்மக்களோடு ஒருமைப்பாட்டுணர்வு கொண்டு இவர்களுக்கு உதவுமாறு கேட்டுள்ளது.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர் பேரவையின் பிறரன்பு நிறுவனம் CAFOD, இந்த 2012ம் ஆண்டில் அது ஆரம்பிக்கப்பட்டதன் 50 ம் ஆண்டைச் சிறப்பித்து வருகிறது. வளரும் நாடுகளின் துன்பங்களையும் ஏழ்மையையும் அகற்றுவதற்கு உழைத்து வருகிறது CAFOD








All the contents on this site are copyrighted ©.