உலகில் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் மக்களை மனதில் வைத்து நோன்பு இருக்குமாறு
அமெரிக்க ஆயர்கள் அழைப்பு
மார்ச்02,2012. உலகில் சுமார் 92 கோடியே 50 இலட்சம் பேர் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையை
எதிர்கொள்ளும்வேளை, அவர்களுக்கு உதவும் நோக்கத்தில், இவ்வெள்ளியன்று செபம் மற்றும் நோன்பைக்
கடைப்பிடித்து, தானதர்மங்கள் செய்யுமாறு கேட்டுள்ளனர் அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள். தவக்காலத்தின்
வெள்ளிக்கிழமையன்று நோன்பு இருப்பதன் மூலம், உணவுக்கெனச் செலவழிக்கும் பணத்தைக் குறைத்து
பிறருக்கு உதவி செய்யுமாறு அமெரிக்க ஆயர்கள், கத்தோலிக்கர்களைக் கேட்டுள்ளனர். கத்தோலிக்கச்
சமூகப் போதனைகள், ஒருவர் ஒருவர் மீது அக்கறை காட்டுவதற்கு அழைப்பு விடுப்பதையும் ஆயர்கள்
சுட்டிக் காட்டியுள்ளனர்.