2012-03-02 15:05:12

உலக வெப்பநிலை மாற்றம் குறித்த கிறிஸ்தவத் தலைவர்களின் வேண்டுகோள்


மார்ச்02,2012. உலக வெப்பநிலை மாற்றம் குறித்து பாராமுகமாய் இருப்பதற்கு மனம் வருந்த வேண்டுமென்று பல கிறிஸ்தவத் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பிரிட்டன் கர்தினால் Keith O’Brien, ஆங்லிக்கன் பேராயர்கள் Rowan Williams, Desmond Tutu உள்ளிட்ட கிறிஸ்தவத் தலைவர்கள் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக வெப்பநிலை மாற்றத்தால் உலகினர் எதிர்நோக்கும் பிரச்சனைகள் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.
இப்பூமியை மட்டுமல்ல, இறைவனின் சாயலான நம் அயலார்களையும் நம்மையும் அன்பு செய்யத் தவறியுள்ளோம் என்று கூறும் இவ்வறிக்கை, மனம் வருந்துதல் என்பது, ஆபத்துக்களை அகற்றுவதற்கு உடனடியாகத் திட்டவட்டமான வழிகளைக் கண்டறிவதாகும் என்றும் தெரிவிக்கிறது.








All the contents on this site are copyrighted ©.