பிலிப்பின்ஸ் அரசுத் தலைவருக்கு ஆயர் பேரவை விடுத்த அழைப்பு
பிப்.29,2012. அக்டோபர் மாதத்தில் அருளாளர் Pedro Calungsod புனிதராக உயர்த்தப்படும்
வேளையில், பிலிப்பின்ஸ் அரசுத் தலைவர் Benigno Aquino அங்கிருந்தால், தங்களுக்குப் பெருமையும்,
மகிழ்வும் அளிக்கும் என்று பிலிப்பின்ஸ் ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Jose Palma கூறினார். ஆயர்
பேரவையின் சார்பில் பேராயர் Palmaவும், முன்னாள் பேராயர் கர்தினால் Ricardo Vidalம் இப்புதனன்று
பிலிப்பின்ஸ் அரசுத் தலைவரைச் சந்தித்தபின், செய்தியாளர்களிடம் பேசுகையில், பேராயர் Palma
அரசுத் தலைவருக்கு ஆயர் பேரவை விடுத்துள்ள இந்த அழைப்பைப் பற்றி குறிப்பிட்டார். மேலும்,
பிலிப்பின்ஸ் நாட்டின் இரண்டாவது புனிதராக உயர்த்தப்படும் Pedro Calungsodக்காக நவம்பர்
மாதம் Cebu நகரில் நடைபெற உள்ள ஒரு பெரும் விழாவுக்கும் அரசுத் தலைவரை அழைத்திருப்பதாக
பேராயர் அறிவித்தார். 2012ம் ஆண்டுக்கான பயணத் திட்டங்களை அரசுத் தலைவர் Aquino ஏற்கனவே
தீர்மானித்துவிட்டதால், இந்தப் பயணத்தை மேற்கொள்ள முடியாதென்று அவர் கூறியதாக கர்தினால்
Vidal அறிவித்தார்.