2012-02-28 14:58:17

மதச் சுதந்திரத்தைப் பாதுகாக்க ஸ்காட்லாந்து கர்தினால் அழைப்பு


பிப்.28,2012. மதச் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் ஒவ்வொருவரும், பாகிஸ்தான் நாட்டு அரசியல்வாதியும் மனித உரிமை நடவடிக்கையாளருமான Shahbaz Bhattiயின் கொலைக்கு நீதி கிடைக்க உழைக்க முன்வரவேண்டும் என்றார் ஸ்காட்லாந்து கர்தினால் Keith Patrick O’Brien.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் 2ம் தேதி கொல்லப்பட்ட Shahbaz Bhattiயின் முதலாம் ஆண்டு நினைவு மார்ச் 10ம் தேதி, சனிக்கிழமையன்று இலண்டனில் அமைதி ஊர்வலத்துடன் சிறப்பிக்கப்பட உள்ளதையொட்டி அனுப்பியுள்ள செய்தியில் இவ்விண்ணப்பத்தை முன்வைத்துள்ளார் கர்தினால்.
மத உரிமைக்காக அவர் விடுத்த அழைப்பு, மனித மாண்பில் அக்கறையுடைய ஒவ்வொருவரும் பின்பற்றவேண்டிய ஒன்று எனக் கூறும் கர்தினால் Patrick O’Brienன் செய்தி, Shahbaz Bhattiயின் சாட்சிய வாழ்விலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டியது நிறைய இருக்கின்றது எனக் கூறுகிறது.
கத்தோலிக்கர்களுக்காக மட்டுமல்ல, மதநிந்தனைச் சட்டத்தின் துணைகொண்டு பொய்யான குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் அனைத்து மத சிறுபான்மையினருக்காகவும் Shahbaz Bhatti குரல் எழுப்பினார் என கர்தினாலின் செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.